• info@disciplesofchristm.com
  • +91 9703676184, +91 7010068654
சகோ புரூஸ் ராப்சன்

எங்களை பற்றி

சகோதரர் புரூஸ் ஒரு புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார். 20 வயது வரை அனைத்து பாரம்பரிய கிறிஸ்தவ நடவடிக்கைகளையும் பின்பற்றினார்.

பின்னர், அவர் வேலை செய்யத் தொடங்கியபோது, அவர் தன் குடும்பத்திற்குள் ஒரு நல்ல மனிதராக தன்னைக் காட்டிக்கொண்டார். இருப்பினும், குடும்பத்திற்கு வெளியே, அவர் ஒரு அநீதியான வாழ்க்கையை வாழ்ந்துவந்தார். அவர் சிகரெட்பிடிப்பதற்கும், மது அருந்துவதற்கும் அடிமையாக இருந்தார். அவர் 'கிளி ஜோதிடத்திற்கு' கூட சென்று எதிர்காலத்தை அறிய கையை காட்டியிருந்தார். சில நாட்களுக்குப் பிறகு, ஜோதிடருக்குக் காட்டப்பட்ட கையை தேவன் உடைத்தார். ஆனாலும் அவர் கர்த்தராகிய இயேசுவின் கற்பனைகளை அறியவில்லை.

அவர் தனது 29 வயதில் மிஸ்ஜாஸ்லின் ஜெபஸ்டியை மணந்தார். அவர்கள் திருமணமான சில மாதங்களுக்குள், அவருக்கு வேலையில் சிக்கல் வந்தது, சம்பளம் முதலாளியால் செலுத்தப்படவில்லை. சில மாதங்களில் வேலை போயிற்று. எனவே ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு திரும்பி வர முடிவு செய்தனர். அப்போது தான் அவர் தனது வாழ்க்கையின் நிலைமையை மாற்றுவதற்காக தொடர்ந்து தேவனைத் தேடத் தொடங்கினார். அந்த நேரத்தில் நம் தேவன் இரக்கத்துடன் அவருடைய வாழ்க்கையில் வந்தார். அல்லேலூயா! தாகமாக அவரைத் தேடிட தேவன் அவர் இருதயத்தை மாற்றினார். தேவன் அவரின் வாழ்வின் நிலைமையை மாற்றுவதாக வாக்களித்தார். (அவருடைய வாக்குறுதியின்படி தேவன், சகோதரர் புரூஸின் வாழ்க்கையில் எல்லாவற்றையும் வழங்குகிறார் - நாம் ஆராதிக்கும் தேவன் வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரு நல்ல தேவன்ஆமென்!).

இந்த அற்புதமான இரட்சிப்பின் பின்னால் ஒரு ரகசிய பிரார்த்தனை இருந்தது. ஆமாம், சகோதரி ஜாஸ்லின் ஜெபஸ்டிதன் இதயத்தை தேவனிடம் ஊற்றி ஜெபித்த ஜெபங்களுக்கு தேவன் பதிலளித்தார். சகோதரனின் இரட்சிப்பின் இரண்டு ஆண்டுகளுக்குப்பின்பு தான் இதைபற்றி சகோதரி தெரிவித்தார்கள். சகோதரர் தன் மனைவி பிரார்த்தனை செய்வதையும், மண்டியிட்டு அழுததையும் பார்த்திருந்தார், ஆனால் அழுகை அவருக்காகதான் என்று அப்போது அவருக்கு தெரிந்திருக்கவில்லை. நாம் சேவிக்கும் தேவன் எவ்வளவு அற்புதமான ஆண்டவர் ஆமென்!

அழிந்து போகும் ஆத்மாக்களுக்காய் ஜெபிக்கசகோதரர் கர்த்தருடைய ஆவியால் வழிநடத்தப்பட்டார். பரிசுத்த ஆவியானவர் ஜெபத்தின் முறையையும் வேதசத்தியங்களையும் கற்றுதந்தார். சகோதரர் எந்த இறையியல் வகுப்புகளுக்கும் சென்றதில்லை. சகோதரனுக்கும் தேவனுக்கும் இடையில் ஒரு உடன்படிக்கை இருந்தது, எனவே தேவன் வேதசத்தியங்களை கற்றுதருகிறார். லூக்கா 10: 3,9 ன் படிசகோதரருக்கு உயர் அழைப்பு வந்தது "புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்… அவ்விடத்திலுள்ள பிணியாளிகளைச் சொஸ்தமாக்கி: தேவனுடையராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்." ஒருஅறையில் தனியாக ஜெபிக்கும் போது கர்த்தரால் அபிஷேகம் செய்யப்பட்டார். ஏறக்குறைய 5 ஆண்டுகள் ஹைதராபாத்தில் பிரார்த்தனை ஒருங்கிணைப்பாளராக தானாக முன்வந்து ஒரு மிஷனரி அமைப்பின் ஒரு பகுதி நேர ஊழியராக இருந்தார், கர்த்தரின் ஊழியத்தை செய்ய தெலுங்கானாவின் பல இடங்களுக்கு அந்த ஊழியத்திலிருந்து சென்றிருக்கிறார்,

கர்த்தர் சகோதரரை அழைத்து 2009 ஆம் ஆண்டில் தனது மனைவியின் சொந்த ஊரை ஊழியதளமாக வழங்கினார், மேலும் 2012 ஆம் ஆண்டில் 'கிறிஸ்துவின் சீஷர்கள் ஊழியங்கள் - Disciples of Christ Ministries (DCM)' என்ற ஊழியத்தின் பெயரையும் கொடுத்தார். தேவன் சகோதரரை குடும்பமாக மார்ச் 2018 இல் ஊழியதளத்திற்கு அனுப்பினார். DCM 9 ஜூலை 2016 அன்று சென்னையில் தனி ஊழியமாக கர்த்தரால் துவங்கப்பட்டது. . மார்ச் 2017ல் அறக்கட்டளையாக பதிவுசெய்திட தேவன் கிருபைதந்தார்.

ஏழைகளுக்கும் தேவையுள்ளவர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் உதவும்படி தேவன் தம்முடைய தரிசனத்தை ஒருசவாலான கேள்வியோடு அதாவது இஸ்ரவேலரை 40 ஆண்டுகள் வனாந்திரத்தில் ஒரு குறைவில்லாமல் நடத்திய நான் உனக்கு இந்த ஊழியத்திற்க்கெண்டு கொடுக்கமாட்டேனோ? கர்த்தருடைய கரம் குறுகியிருக்கிறதோ? இந்த வார்த்தையின் படியே ,இதெற்கென்று ஒரு தொண்டு செய்யும் ஊழியமாக, 'CITY OF REFUGE' தொடங்கபட்டு தனி அறக்கட்டளையாக மே 2017ல் பதிவுசெய்யப்பட்டு உள்ளது.

சகோதரி ஜாஸ்லின் ஜெபஸ்டி

சகோதரி ஜாஸ்லின் புரூஸ் ஒரு சி.எஸ்.ஐ கிறிஸ்தவ குடும்பத்தில் வடக்கு வேப்பிலான்குளம் (பேர்ப்பிலான்குளம்) என்ற கிராமத்தில் பிறந்தார்.

நம் கர்த்தர் சிறுவயதிலிருந்தே அவரைப்பின் தொடர சகோதரிக்கு ஞானத்தைக்கொடுத்தார். அவள் நேரத்தைக்கிடைக்கும் போதெல்லாம் ஜெபிக்க சபை மக்களைச் கூட்டி சேர்ப்பார்கள். மேலும், கிராமத்தில் இளம்பெண்கள் மற்றும் பெண்களைக்கூட்டி வழக்கத்தின் படியே பிரார்த்தனைகள் ஏறெடுக்கப்பட்டது. பலர் தனிப்பட்ட ஜெபங்களுக்காக தேடிவருவார்கள், தேவன் அந்த ஜெபங்களை கேட்டு பதிலத்து மகிழபண்ணினார். தேவனுக்கே மகிமை! கர்த்தர் சகோதரியை ஞாயிறு பள்ளி ஆசிரியராகவும், வாலிபர் கூடுகை ஆசிரியராகவும், விபிஎஸ் இயக்குநராகவும் பயன்படுத்தினார். 2004 ஆம்ஆண்டில், தேவன் ஊழியத்திற்கு அழைக்கும் தரிசனத்தை சகோதரி கண்டார்கள்.

சகோதரி செப்டம்பர் 2008 இல் திரு. புரூஸை அவர்களை திருமணம் செய்தார். அதன் பிறகு தான் அவர் தனது கணவர் போதைக்கு அடிமையானவர் என்பதை அறிந்து கொண்டார், கணவருடைய இரட்சிப்புக்காக சகோதரி தொடர்ந்து ஜெபித்தார். தொடர் ஜெபத்தின் விளைவாக தேவன் சகோதரனுடைய வாழ்க்கையைத்தொட்டு, அவருடைய ஊழியத்திற்கு அவரை அழைத்தார். மாத்திரம் அல்ல சகோதரி தனது குடும்ப உறுப்பினரின் இரட்சிப்புக்காகவும் ஜெபித்தார், தேவன் அவர்களையும் தொட்டு இரட்சித்தார். தேவனுக்கேமகிமை! சகோதரியும் சகோதரரும் இணைந்து கர்த்தருடைய ஊழிய அழைப்பைப் பெற்றார்கள்,

ஆகவே அவர்கள் ஒரு குடும்பமாக ஊழியத்திற்குச் சென்று ஜனங்களின் வாழ்க்கையைத் தொட்டு ஜனங்களை அடிமைத்தனங்களிலிருந்து விடுவிக்க, தேவன் தமது இராஜ்யத்திற்காக இருவரையும் பயன்படுத்துகிறார். தேவனுக்கே மகிமையுண்டாவதாக ஆமென்!