• info@disciplesofchristm.com
  • +91 9703676184, +91 7010068654
சேவை – அடைக்கலப் பட்டணம் (City of Refuge)- CoR

லூக்கா 6:38 "கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்;"

தேவன் தந்த மற்றுமொரு ஊழியமாம் அடைக்கலப் பட்டணம் (City of Refuge) ஊழியத்தில் சமூக சேவை செய்யப்படுகிறது. இதில் சகோதரர் புரூஸ்ராப்சன் மற்றும் சகோதரி ஜாஸ்லின் ஜெபஸ்டி தலைமையிலான டி.சி.எம்'ன் மனிதாபிமான, மருத்துவ, கல்வி சேவைகள் அடங்கும்.

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வழிதடங்களை பின்பற்றி, யோவான் 13: 29 ல் எழுதப்பட்டிருப்பதைப் போல, "…தரித்திரருக்கு ஏதாகிலும் கொடுக்கும் படிக்காவது", விதவைகள், முதியவர்கள், மாற்று திறனாளிகள், அனாதைகள் மற்றும் ஆதரவற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஊழியம் உறுதிபூண்டுள்ளது

முதன்மை முதல் மூன்றாம் நிலை வரை கல்வி உதவி, அனாதைகள் மற்றும் வறியவர்களின் குழந்தைகளுக்கு இந்த ஊழியத்திலிருந்து உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த ஊழியத்திலிருந்து இலவச மருத்துவ முகாம்களை கிராமங்களில் தேவைப்படுபவர்களுக்கு செயல்படுத்தும் நோக்கம் உள்ளது.

கர்த்தரை அறிவதும் அவருடைய செயல்களை பார்ப்பதும் மட்டுமல்ல, அவருடைய வழியைக்கற்றுக்கொள்வதும் அவசியம் என்பதை நினைவில் கொள்வது அவசியம். ஆகவே, அன்பு இல்லாமல் நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் ஒன்றுமில்லாததால், அன்பை நம் இதயத்தில் முதலிடத்தில் வைத்திருக்க வேண்டும்.

கர்த்தர் உங்களை ஏவினால் பசித்தவர்களுக்கு உணவளிக்கவும், ஏழைகளுக்கு நிவாரணம் அளிக்கவும், பலவீனமானவர்களையும் ஊனமுற்றவர்களையும் ஆதரிக்கவும், ஏழைகளை நம் பொருட்களினால் ஆசீர்வதிக்கவும். இந்த கனமான ஊழியத்தில் நீங்களும் பங்கு கொள்ளலாம்.